Wednesday, March 30, 2011

தேன்மொழி எந்தன் தேன்மொழி - அத்தியாயம் 10


தேன்மொழி எந்தன் தேன்மொழி - அத்தியாயம் 10


 

என் ஆயுளின் அந்தி வரை
வேண்டும் நீ எனக்கு...
உன் தோள்களில் சாய்ந்திட
வேண்டும் நீ எனக்கு...

   அகல்யா வானொலிப் பெட்டியை தன் மெத்தையிலிருந்து எடுத்து நகர்த்தி வைத்தாள்,
     போதும் ரேணு. இனிமே நான் ரேடியோ எல்லாம் கேட்கப் போறதில்ல,
      ரேணூ வேண்டுமென்றே வெளியே எட்டிப் பார்த்தாள்.
     யாரை பாக்கற?”
     இல்ல எனக்கு தெரிஞ்ச ஒரு பைத்தியக்கார ரசிகை இருந்தாங்க,வருணுடைய குரலைக் கேக்கறதுக்காக முக்கியமான வகுப்பைக் கூட கட் பண்ணிட்டு லெக்ச்சரர்கிட்ட வாங்கி கட்டிக்கிட்டவங்க,அவுங்க எங்க போனாங்கன்னு பாக்கறேன்,”
     என்னா ஜோக்கா? ஹா ஹா ஹா சிரிச்சிட்டேன்,”
     அன்று முழுக்க வருண் மீதான அகல்யாவின் கோபம் தீரவேயில்லை,ரேணுவிடம் சொன்னபடி அவள் கடைசிவரை வானொலியைத் திறக்கவே போவதில்லை என்று சபதமிட்டிருந்தாள்.ஆனால் ரேணு வேண்டுமென்றே காதில் வாக்மேனைப் பொருத்திக்கொண்டு அவளைக் கடுப்பேற்றினாள்.
    உங்க வருண் மாமாவுக்கு இன்னிக்கு என்னா ஆச்சி சீனியர்?என்னென்னமோ உளறராரு? எல்லாமே ஊளைப் பாட்டா போடறாரு?நான் நெனைக்கிறேன் அன்னைக்கு உங்க பக்கத்துல வந்து உட்கார்ந்ததா சொன்னீங்கள்ய்? அதுதான் காரணம் போல்.
    வருணுக்கு உடல்நலம் ஏதும் சரியில்லையோ?” பதறிப்போய் வானொலியைத் திறந்தாள்.ரேணு சொன்னதுபோன்று வருண் வானொலியில் உளறிக்கொண்டிருந்தான்.அவனது குரலில் வழக்கமாக இருக்கும் துடிப்பும் உற்சாகமும் இல்லை.அவனுடைய வழக்கமான சிரிப்பு கூட காணாமல் போயிருந்தது. எதையோ தொலைத்தவன் போன்று ஒரு வித விரக்தியுடன் பேசிக்கொண்டிருந்தான்.
  
* * *
     மாலை மணி நான்கை நெருங்கி கொண்டிருந்தது.வருணுடைய அறிவிப்புப் பணி முடிய இன்னும் சில வினாடிகளே இருந்தன.ஒரு நிமிடத்திற்கு முன்பு கூட தேன்மொழிக்குப் போன் செய்து பார்த்தான்.தொடர்பு கிடைக்கவேயில்லை.
     வருணுக்கு ஒருவிதத்தில் தான் தேன்மொழியிடம் கோபப்பட்டது நியாயமாகவே தோன்றியது.முன்பு அவள் அவளுடைய கதையை அவனிடம் சொன்னபோதே தேன்மொழி பிரியனிடம் கெஞ்சியதை வருண் வன்மையாக கண்டித்தான்.இவள் ஏன் இந்த அளவுக்குத் தாழ்ந்து போனாள் என்று அவள் மீதுதான் அவனுக்கு அதிக கோபம்.அவள் இன்னமும் பிரியனைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை.பிரியனை அவளுடைய மனதிலிருந்து முழுமையாக அகற்றிவிட துடித்தான்.
     தேன்மொழி மாற வேண்டும் என்று வருண் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பான்? எவ்வளவு அறிவுரைகள் கூறியிருப்பான்? தன்முனைப்பு நிகழ்ச்சிகளுக்கெல்லாம் அவளை அழைத்துப் போயிருக்கிறான்.ஆனால் அவள் இன்னும் பழைய மாதிரிதானே இருக்கிறாள்? அவன் அவளுக்காக எடுத்துக் கொண்ட முயற்சிகள் யாவும் வீண்தான் என்று அறியும்போது நிச்சயம் அவனுக்குக் கோபம் வரும்தானே? ஏதோ ஒரு கோபத்தில் ஒரு உரிமையில் திட்டிவிட்டால் இப்படியா அலைய வைப்பதுடூ ஆனாலும் அவள் எங்குதான் போயிருப்பாள்டூ்
    பல்வேறு குழப்பங்களுடன் அவன் அங்காசபுரியைவிட்டு வெளியே வந்தபோது அவனுடைய மோட்டார் சைக்கிளை நிறுத்திவைக்கும் இடத்தில் நின்றிருந்தாள் தேன்மொழி.அந்த இடத்தில் அவன் எதுவும் பேசவில்லை.தேன்மொழியைத் தான் வழக்கமாகப் போகும் பிரிக்பீல்ட்ஸ்; சீத்தாராம் உணவகத்திற்கு அழைத்துப் போனான்.
    வருண் வாங்கி கொடுத்த தோசையைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிய்த்து மீன்கறியில் தொட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் தேன்மொழி.
    நான் நேத்து போனை அடச்சி வெச்சிட்டு, வீட்டுப் போனோட வொயரையும் கழட்டி வெச்சிட்டேன்,” அவன் கேட்காமலேயே தலையைக் குனிந்தபடி வேறு திசையில் பார்த்துக் கொண்டு சொன்னாள்.
   நான் கூட நீ விஷத்த குடிச்சிட்டு எந்த ஆஸ்பத்திரியில படுத்து கிடக்கறியோன்னு நெனச்சேன்,” வருண் வேண்டுமென்றே நக்கலாகச் சொல்ல அவள் அவனைப் பார்த்து முறைத்தாள்.
   கண்டமாதிரி ஏசும்போது மட்டும் அதெல்லாம் தெரியலையா? வாய்க்கு வந்ததையெல்லாம் பேசிட்டு திரும்பி கூட பார்க்காம போனீங்க? என்னால உங்களுக்கு ஏன் கஷடம்? இனிமே என்னை நானே பாத்துக்குவேன்.அம்மா போன பிறகும் என்னால தனியே இருக்க முடிஞ்சது.பிரியன் போன பிறகும் என்னால தனியா இருக்க முடிஞ்சது.அதே மாதிரி நீங்க என்னைவிட்டுப் போனாலும் என்னால இருக்க முடியும்,”
   இதுதான் முதல்முறை.அவள் இவ்வளவு கோபமாக பேசி அவன் பார்த்தது.ஆனால் அவளுடைய அந்தக் கோபத்தை அவன் பெரிதும் இரசித்தான்.
   தேனும்மா, உன்னை நான் ரொம்ப ஏசிட்டேன்தான் ஒத்துக்கறேன்.ஏதோ ஒரு உரிமையில ஏசிட்டேன்.அதுக்காக இப்படிதான் செய்யறதா? ஒரு நாளு பூரா தவியாய் தவிக்க வெச்சிட்டியேமா?”
  அவன் அதிக சந்தோஷமாக இருக்கும்போது இப்படிதான் அவளை தேனும்மா என்பான்.
   அவள் சட்டென நிமிர்ந்தாள்.
   உங்ககிட்ட ஒன்னு சொல்லனும், சொல்லலாமா?”
   இது என்ன புதுசா அனுமதியெல்லாம் கேக்கற?”
   நீங்கதானே இனிமே உங்க கிட்ட எதையும் சொல்ல வேண்டாம்னு சொன்னீங்க? உங்களுக்கு எவ்வளவோ வேலைகள் இருக்கும் வேற..நான் தொந்தரவு பண்ணிட கூடாதில்லையா?
   நான் அந்த அர்த்தத்துல சொல்லலம்மா,சொல்லு,”
   என்னால பிரியனை மறக்க முடியலங்கறது உண்மைதான்.பிரியனுக்காக கெஞ்சி கதறனது உண்மைதான்.பிரியனை நெனச்சி நான் இன்னமும் அழறது கூட உண்மைதான்.ஆனா இப்ப அந்தப் பிரியனே நேர்ல வந்து என்னைக் காதலிக்கறதா சொன்னா கூட போடான்னு சொல்லிட்டு வந்துடுவேன்,
    அவள் அப்படி சொன்னது அவனுக்குப் பிடித்திருந்தது.
    சரி, என் மேல கோபம் ஏதுமில்லையே?”
    அவள் இல்லை என தலையசைத்தாள்.
    அழுதியா?”
    அன்னிக்கு ஏற்கனவே அழுதுக்கிட்டு இருந்தேன்.நீங்க ஏசிட்டுப் போனதும் இன்னும் ரொம்ப அழுதேன்.எப்படி வலிச்சது தெரியுமா?” அவள் திடீரென மேசையில் தலைசாய்த்து அழுதாள்.
   வருணுக்கு ஒரு கணம் என்ன செய்வதென்று தெரியவில்லை.அவளுடைய தலையில் கைவைத்து ஆறுதல் சொல்ல எண்ணி தன் கையை அவளை நோக்கி கொண்டு போனான்.தேன்மொழி அவனை நிமிர்ந்து பார்த்தாள்.வருண் என்ன நினைத்தானோ தன் கையை பின்னுக்கு இழுத்துக் கொண்டான்.
  இரு வரேன்,” வருண் கை கழுவ எழுந்து போனான்.அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் தேன்மொழி.
  இரண்டு நாட்களா எப்படி அழுதுக்கொண்டிருந்தாள்?இப்போது அவளுடைய சோகமெல்லாம் போன இடமே தெரியவில்லை.எங்கிருந்து வந்தது இந்த புத்துணர்ச்சியும் குறும்பு பேச்சும்?வருண் அருகிலிருக்கும்போது தான் இன்னும் அதிக தன்னம்பிக்கையோடு இருப்பதாக தோன்றியது அவளுக்கு.
  வருண் அன்பானவன். பண்பானவன். பெண்களை மதிப்பவன். குறும்புக்காரன் வானொலியின் மூலம் மலேசியாவிலுள்ள அனைத்து இந்தியர்கள் மத்தியிலும் பிரபலமானவன். மலேசிய தொலைக்காட்சியின் தினசரி நிகழ்ச்சியின் வாயிலாக பிற இனத்தவர்களுக்கும் நன்கு அறிமுகமானவன். இப்படி எவ்வளவு பெருமைக்குரிய விசயங்கள் இருக்கின்றன வருணைப் பற்றி,அப்படிப்பட்ட ஒருவன் தனக்கு நண்பனாக கிடைத்தது பெரும் பாக்கியமென்றே கருதினாள் அவள்.
    வா தேனு. போகலாம்,”வருண் அவளை அழைத்துக்கொண்டு போனான்.
  
                                                    தொடரும் …….

No comments:

Post a Comment