Monday, April 18, 2011

தேன்மொழி எந்தன் தேன்மொழி - அத்தியாயம் 12

தேன்மொழி எந்தன் தேன்மொழி அத்தியாயம் 12

 

ஏன்தான் என்னோடு உன் ஊடல் நாடகம்
நீதான் நெஞ்சோடு நீங்காத காவியம்
ஆனாலும் நீதான் சின்ன பிள்ளை
ஆகாது கண்ணா அன்புத் தொல்லை

      வானொலி கேட்டுக்கொண்டே பாடம் படித்துக் கொண்டிருந்த அகல்யா அதிர்ச்சியில் நாற்காலியிலிருந்து பொத்தென்று விழுந்தாள்,
      உன்னை ஒரு பூ கேட்கவே ஓடி வந்தேன் அங்கே
       பூந்தோட்டமே சொந்தம் என்றhல் நான் போவது எங்கே??
       அகல்யாவுக்கும் சித்ராவுடன் இணைந்து பாடவேண்டும் போலிருந்தது.
      அப்படிதான் ஆரம்பமானது வருண் அகல்யாவின் காதல் கதை.ரேணு உட்பட எந்த தோழியிடமும் அவள் வருணுடன் பழகுவதைச் சொன்னதேயில்லை.வருண் அவனுக்குப் பழக்கமில்லை என்று நம்பிக்கொண்டிருந்த அவர்களும் அவளிடம் வருணைப் பற்றி என்னென்னவோ சொன்னார்கள்.அவனுக்கு ஏற்கனவே காதலி இருப்பதாகச் சொன்னார்கள்.தன்னுடன் பணிபுரியும் ஒரு பெண் அறிவிப்பாளரை அவன் விரும்புவதாகச் சொன்னார்கள்.
       இதற்கிடையே ரேணுவின் தோழி ஒருத்தி சொன்னாள்.வானொலி அறிவிப்பாளராக இருக்கும் நளாயினி அவளுடைய பெரியம்மா மகளாம்.அவளுடைய பெரியம்மாவிற்கு  வருணை அதிகம் பிடிக்குமாம்.வருண் அவருக்கு நல்ல பழக்கமாம்.இவளுக்கு வருணைத் திருமணம் கொடுக்கலாம் என்றொரு எண்ணம் அவள் பெரியம்மாவிற்கு இருக்கிறதாம்.
       நான் ஒரு சொல் சொன்னா போதும்,வருண் எனக்கு கிடைச்சிடுவாரு என்று சபதமிட்டாள்.வருணிடம் அகல்யா இதை சொன்னபோது நளாயினியின் அம்மாவிடம் பேசியதேயில்லையே என்றான்.ஒரே ஒரு தடவைதான்  தூரத்தில் பார்த்து கையசைத்ததாக சொன்னான்.அவள் சபதம் போட்டதையும் சொன்னாள்.
       ஒரு வேளை அந்தப் பொண்ணுக்கு என்னைக் கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசை போலிருக்கு,என்ன பண்றது வானொலியில சேர்ந்தாலும் சேர்ந்தேன்,என்மேல நிறைய பொண்ணுங்க ஆசைப்படறாங்க என்றான்.
      நெனைப்புத்தான்,” என்று சலித்துக்கொண்டாள் அகல்யா.
      பழைய நினைவுகள் அவளுக்கு வருணின் மீது அதிக ஏக்கத்தை ஏற்படுத்தியது.இருந்தபோதிலும் ஆசைகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு வேண்டுமென்றே அவனைத் தொடர்புக்கொள்ளாமல் இருந்தாள்.இரண்டு நாட்களுக்காகவாவது அவனை ஏங்க வைக்க விரும்பினாள்.ஏற்கனவே ஒரு முறை இதுமாதிரி செய்தபோது அவன் பதறிப்போய் அவளைத் தேடி வந்தது நினைவில் நின்றது.
     ஆனால் அவளுடைய எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது.தினங்கள் மூன்று கடந்தும் அவன் அவளைத் தொடர்புக் கொள்ளவில்லை.அவள் ஒரு முகாமில் இருந்ததால் வானொலியும் கேட்க முடியாமல் இருந்தது.
     சரி இதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாது என்று அவளே அவனுக்குப் போன் செய்தாள்.
* * *

        வானொலியில் செய்தித்துளிகளை வாசித்துக் கொண்டிருந்தான் வருண்.திடீரென அவனுடைய கைத்தொலைபேசி அலறவும் சற்று தடுமாற்றமடைந்து செய்தி வாசிப்பதை சில வினாடிகள் நிறுத்திவிட்டான்.வேலைப்பளுவின் காரணமாக கைத்தொலைபேசியை அதிர்வலையில் வைக்க மறந்து போயிருந்தான் அவன்.
   பிறகு ஒருவாறு தன்னைச் சுதாகரித்துக்கொண்டு செய்தி வாசித்து முடித்து ஒரு பாடலை ஒலியேற்றிவிட்டு கைத்தொலைபேசியை எடுத்துப் பார்த்தான்.அகல்யாதான் அழைத்திருந்தாள்.அவனுக்கு முதன்முதலாக அவள் மீது கோபம் வந்தது.
   வரவர அவளுடைய விளையாட்டுத்தனத்திற்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது.ஏற்கனவே ஓரிரு தடவை அவன் அறிவிப்பு செய்யும்போதெல்லாம் அவள் அவனைத் தொலைபேசியில் அழைத்து தொந்தரவு செய்திருக்கிறாள்.அவன் கடிந்து கொண்டபோது இனிமேல் அவ்வாறு செய்யமாட்டேன் என்று உறுதிமொழி கொடுத்திருக்கிறாள்.ஆனால் இன்று செய்தி வாசிக்கும்போது அவள் செய்த குறும்புத்தனத்தால் அவனுக்கு எவ்வளவு பெரிய சங்கடம் ஏற்பட்டுவிட்டது?
   எத்தனை பேர் வானொலி கேட்டுக்கொண்டிருந்திருப்பார்கள்?அவனைப் பற்றி என்ன நினைப்பார்கள்?அவன் தனிமனிதனாக பாதிப்படைந்திருந்தால் கூட பரவாயில்லை.ஆனால் வானொலி நிலையத்தின் பெயரும் பாதிப்படைந்தால் என்னவாவது? யாராவது பத்திரிக்கைகளில் வானொலியைப் பற்றி தவறாக எழுதிவிட்டால் என்ன செய்வது? தன்னால் வானொலி நிலையத்தின் நற்பெயர் பாதிப்படைவதை அவன் விரும்பவில்லை.அகல்யாவை நிச்சயம் கண்டித்தாக வேண்டும் என நினைத்தான்.அதற்குள் சில நேயர்கள் தொலைபேசியில் அவனை அழைத்து அவனுடைய தவற்றையே சுட்டிக்காட்டி பேச அவனுடைய கோபம் சற்று அதிகரித்தது.
   அவனுக்கு விளையாட்டுத் தனமாக இருக்கும் பெண்களை அவ்வளவாக பிடிப்பதில்லை.அதிலும் அகல்யாவின் விளையாட்டுத் தனம் சற்று அதிகமாகவே உள்ளது.நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு வந்தவன் முதல் வேளையாக அகல்யாவிற்கு போன் செய்தான்.
   3 தினங்களாக அவனுடைய குரலைக் கேட்காத ஏக்கத்தில் கைத்தொலைபேசியை ஆசையோடு கையில் எடுத்த அகல்யா அவன் கோபமாக பேசியதில் வருத்தமடைந்தாள்.ஆரம்பத்தில் அவள் விளையாட்டுத் தனமாக அவன் ஒலிபரப்பில் இருந்தபோது தொலைபேசியில் அழைத்து குறும்பு செய்தது உண்மைதான்.ஆனால் அது அவனுக்குப் பெரும் சங்கடத்தைத் தருகிறது என்று அவன் கண்டித்த பிறகு அவள் தன்னுடைய தவற்றை உணர்ந்துவிட்டாள்.அவன் நிகழ்ச்சியைப் படைத்துக் கொண்டிருக்கிறான் என்று உண்மையிலேயே அவள் அறியவில்லை.காரணம் அவன் வழக்கமாக செவ்வாய்க்கிழமைகளில் வரமாட்டான்.ஆனால் அவன் அவளை எதுவுமே விசாரிக்காமல் எடுத்ததுமே கோபப்பட்டு திட்டியது அவள் மனதைக் காயப்படுத்தியது.
     மறுநாள் அவளே அவனைத் தொடர்புக் கொண்டு பேசினாள்.ஆனாலும் அவனது கோபம் குறைந்ததாக தெரியவில்லை.அவள் சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொள்வதாக திட்டினான்.அவன் மட்டும் எப்படி நடந்து கொள்கிறானாம்..ஏதோ தவறு செய்துவிட்டாள்,ஏசிவிட்டான்.இன்னும் ஏன் கோபம்? அது கூட சிறுபிள்ளைத் தனம்தானே?
    அவன் இன்னமும் தன்னைத் தப்பாகதானே எண்ணிக்கொண்டிருக்கிறான்.அவனை அவசியம் நேரில் சந்திக்க வேண்டும்.சந்தித்து உண்மையில் தன் மீது எந்தத் தவறும் இல்லையென்பதை அவனுக்கு உணர்த்த வேண்டும்.அவன் நிச்சயம் மன்னிப்புக் கேட்பான்.மசியக் கூடாது.அவனை நன்றாக திட்டிவிட்டு வந்துவிட வேண்டும்.ஏதேதோ எண்ணிக்கொண்டு அவனைத் தன்னுடைய தாமானுக்கு முன்பு உள்ள மினிமார்க்கெட்டிற்கு வரச் சொன்னாள்.அவனும் வந்தான்.மழைத்தூறல் போட்டுக்கொண்டிருந்தது.
  வருணன்(வருணபகவான்) அல்லவா?அதான் மழையையும் உடன் அழைத்து வந்திருக்கிறான், என்று எண்ணிக்கொண்டவள் அவனுக்குப் பேசுவதற்கு வாய்ப்பே கொடுக்காமல் படபடவென்று ஒரே மூச்சில் யாவற்றையும் சொல்லி முடித்தாள்.அவன் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தான்.அவள் எதிர்பார்த்தபடி மன்னிப்பெல்லாம் கேட்கவில்லை.
  சரி கிளம்பறேன் போக எத்தனித்தாள்.தூறலாக இருந்த மழை கடுமையாக இருந்தது.அவளுடைய வீட்டிற்கு இன்னும் கொஞ்சம் உள்ளே போகவேண்டும்.மினிமார்க்கெட்டில் ஒரு குடையை வாங்கி கொண்டு அவளைத் தன்னுடன் குடையில் அழைத்துப் போனான்.ஒரு கையில் குடையைப் பிடித்துக்கொண்டு இன்னொரு கையால் அவளுடைய தோளை தன் தோளோடு சேர்த்து அணைத்துக்கொண்டு நடந்தான்.கனமான மழையுடன் போட்டி போட இயலாமல் அந்தச் சின்னஞ்சிறு குடை  பின்வாங்க மழை இருவரையும் நனைத்தது,அருகிலிருந்த ஒரு காலி வீட்டின் முன் கொஞ்ச நேரம் நின்றார்கள்.
  தன்னை உரசிக்கொண்டு நின்றிருந்த அகல்யாவைப் பார்த்தான் வருண்.உண்மையில் அவள் மீதான கோபம் அவனுக்கு எப்போதோ தணிந்து போயிருந்தது.சொல்லப்போனால் ஒரு வாரமாக அறவே பார்க்காமல், ஒரு வார்த்தை கூட பேசாமல் அவள் மீதுள்ள அவன் ஏக்கம் அதிகரித்திருந்தது.மழை அவனுடைய ஏக்கத்தை அதிகப்படுத்த சட்டென்று அவளை இழுத்து தன் முகத்தை அவளை நோக்கிக் கொண்டுபோனான் வருண்.
  ஐயோ என்ன செய்யப் போகிறான்? தான் அதற்கெல்லாம் இன்னும் தயாராகவில்லையே?” பயத்தில் கண்களை இறுக மூடிக்கொண்டாள்.
   பொழைச்சிப் போ,” அவளை ஒன்றும் செய்யாமல் விடுவித்தவன் குடையை அவளிடம் கொடுத்து, அவளைப் போகச்சொல்லிவிட்டு மழையிலேயே நனைந்து கொண்டு போய் மோட்டார் சைக்கிளைக் கிளப்பினான்.

 தொடரும்…..

தேன்மொழி எந்தன் தேன்மொழி - அத்தியாயம் 12

தேன்மொழி எந்தன் தேன்மொழி அத்தியாயம் 12

ஏன்தான் என்னோடு உன் ஊடல் நாடகம்
நீதான் நெஞ்சோடு நீங்காத காவியம்
ஆனாலும் நீதான் சின்ன பிள்ளை
ஆகாது கண்ணா அன்புத் தொல்லை

      வானொலி கேட்டுக்கொண்டே பாடம் படித்துக் கொண்டிருந்த அகல்யா அதிர்ச்சியில் நாற்காலியிலிருந்து பொத்தென்று விழுந்தாள்,
      உன்னை ஒரு பூ கேட்கவே ஓடி வந்தேன் அங்கே
       பூந்தோட்டமே சொந்தம் என்றhல் நான் போவது எங்கே??
       அகல்யாவுக்கும் சித்ராவுடன் இணைந்து பாடவேண்டும் போலிருந்தது.
      அப்படிதான் ஆரம்பமானது வருண் அகல்யாவின் காதல் கதை.ரேணு உட்பட எந்த தோழியிடமும் அவள் வருணுடன் பழகுவதைச் சொன்னதேயில்லை.வருண் அவனுக்குப் பழக்கமில்லை என்று நம்பிக்கொண்டிருந்த அவர்களும் அவளிடம் வருணைப் பற்றி என்னென்னவோ சொன்னார்கள்.அவனுக்கு ஏற்கனவே காதலி இருப்பதாகச் சொன்னார்கள்.தன்னுடன் பணிபுரியும் ஒரு பெண் அறிவிப்பாளரை அவன் விரும்புவதாகச் சொன்னார்கள்.
       இதற்கிடையே ரேணுவின் தோழி ஒருத்தி சொன்னாள்.வானொலி அறிவிப்பாளராக இருக்கும் நளாயினி அவளுடைய பெரியம்மா மகளாம்.அவளுடைய பெரியம்மாவிற்கு  வருணை அதிகம் பிடிக்குமாம்.வருண் அவருக்கு நல்ல பழக்கமாம்.இவளுக்கு வருணைத் திருமணம் கொடுக்கலாம் என்றொரு எண்ணம் அவள் பெரியம்மாவிற்கு இருக்கிறதாம்.
       நான் ஒரு சொல் சொன்னா போதும்,வருண் எனக்கு கிடைச்சிடுவாரு என்று சபதமிட்டாள்.வருணிடம் அகல்யா இதை சொன்னபோது நளாயினியின் அம்மாவிடம் பேசியதேயில்லையே என்றான்.ஒரே ஒரு தடவைதான்  தூரத்தில் பார்த்து கையசைத்ததாக சொன்னான்.அவள் சபதம் போட்டதையும் சொன்னாள்.
       ஒரு வேளை அந்தப் பொண்ணுக்கு என்னைக் கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசை போலிருக்கு,என்ன பண்றது வானொலியில சேர்ந்தாலும் சேர்ந்தேன்,என்மேல நிறைய பொண்ணுங்க ஆசைப்படறாங்க என்றான்.
      நெனைப்புத்தான்,” என்று சலித்துக்கொண்டாள் அகல்யா.
      பழைய நினைவுகள் அவளுக்கு வருணின் மீது அதிக ஏக்கத்தை ஏற்படுத்தியது.இருந்தபோதிலும் ஆசைகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு வேண்டுமென்றே அவனைத் தொடர்புக்கொள்ளாமல் இருந்தாள்.இரண்டு நாட்களுக்காகவாவது அவனை ஏங்க வைக்க விரும்பினாள்.ஏற்கனவே ஒரு முறை இதுமாதிரி செய்தபோது அவன் பதறிப்போய் அவளைத் தேடி வந்தது நினைவில் நின்றது.
     ஆனால் அவளுடைய எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது.தினங்கள் மூன்று கடந்தும் அவன் அவளைத் தொடர்புக் கொள்ளவில்லை.அவள் ஒரு முகாமில் இருந்ததால் வானொலியும் கேட்க முடியாமல் இருந்தது.
     சரி இதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாது என்று அவளே அவனுக்குப் போன் செய்தாள்.
* * *

        வானொலியில் செய்தித்துளிகளை வாசித்துக் கொண்டிருந்தான் வருண்.திடீரென அவனுடைய கைத்தொலைபேசி அலறவும் சற்று தடுமாற்றமடைந்து செய்தி வாசிப்பதை சில வினாடிகள் நிறுத்திவிட்டான்.வேலைப்பளுவின் காரணமாக கைத்தொலைபேசியை அதிர்வலையில் வைக்க மறந்து போயிருந்தான் அவன்.
   பிறகு ஒருவாறு தன்னைச் சுதாகரித்துக்கொண்டு செய்தி வாசித்து முடித்து ஒரு பாடலை ஒலியேற்றிவிட்டு கைத்தொலைபேசியை எடுத்துப் பார்த்தான்.அகல்யாதான் அழைத்திருந்தாள்.அவனுக்கு முதன்முதலாக அவள் மீது கோபம் வந்தது.
   வரவர அவளுடைய விளையாட்டுத்தனத்திற்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது.ஏற்கனவே ஓரிரு தடவை அவன் அறிவிப்பு செய்யும்போதெல்லாம் அவள் அவனைத் தொலைபேசியில் அழைத்து தொந்தரவு செய்திருக்கிறாள்.அவன் கடிந்து கொண்டபோது இனிமேல் அவ்வாறு செய்யமாட்டேன் என்று உறுதிமொழி கொடுத்திருக்கிறாள்.ஆனால் இன்று செய்தி வாசிக்கும்போது அவள் செய்த குறும்புத்தனத்தால் அவனுக்கு எவ்வளவு பெரிய சங்கடம் ஏற்பட்டுவிட்டது?
   எத்தனை பேர் வானொலி கேட்டுக்கொண்டிருந்திருப்பார்கள்?அவனைப் பற்றி என்ன நினைப்பார்கள்?அவன் தனிமனிதனாக பாதிப்படைந்திருந்தால் கூட பரவாயில்லை.ஆனால் வானொலி நிலையத்தின் பெயரும் பாதிப்படைந்தால் என்னவாவது? யாராவது பத்திரிக்கைகளில் வானொலியைப் பற்றி தவறாக எழுதிவிட்டால் என்ன செய்வது? தன்னால் வானொலி நிலையத்தின் நற்பெயர் பாதிப்படைவதை அவன் விரும்பவில்லை.அகல்யாவை நிச்சயம் கண்டித்தாக வேண்டும் என நினைத்தான்.அதற்குள் சில நேயர்கள் தொலைபேசியில் அவனை அழைத்து அவனுடைய தவற்றையே சுட்டிக்காட்டி பேச அவனுடைய கோபம் சற்று அதிகரித்தது.
   அவனுக்கு விளையாட்டுத் தனமாக இருக்கும் பெண்களை அவ்வளவாக பிடிப்பதில்லை.அதிலும் அகல்யாவின் விளையாட்டுத் தனம் சற்று அதிகமாகவே உள்ளது.நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு வந்தவன் முதல் வேளையாக அகல்யாவிற்கு போன் செய்தான்.
   3 தினங்களாக அவனுடைய குரலைக் கேட்காத ஏக்கத்தில் கைத்தொலைபேசியை ஆசையோடு கையில் எடுத்த அகல்யா அவன் கோபமாக பேசியதில் வருத்தமடைந்தாள்.ஆரம்பத்தில் அவள் விளையாட்டுத் தனமாக அவன் ஒலிபரப்பில் இருந்தபோது தொலைபேசியில் அழைத்து குறும்பு செய்தது உண்மைதான்.ஆனால் அது அவனுக்குப் பெரும் சங்கடத்தைத் தருகிறது என்று அவன் கண்டித்த பிறகு அவள் தன்னுடைய தவற்றை உணர்ந்துவிட்டாள்.அவன் நிகழ்ச்சியைப் படைத்துக் கொண்டிருக்கிறான் என்று உண்மையிலேயே அவள் அறியவில்லை.காரணம் அவன் வழக்கமாக செவ்வாய்க்கிழமைகளில் வரமாட்டான்.ஆனால் அவன் அவளை எதுவுமே விசாரிக்காமல் எடுத்ததுமே கோபப்பட்டு திட்டியது அவள் மனதைக் காயப்படுத்தியது.
     மறுநாள் அவளே அவனைத் தொடர்புக் கொண்டு பேசினாள்.ஆனாலும் அவனது கோபம் குறைந்ததாக தெரியவில்லை.அவள் சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொள்வதாக திட்டினான்.அவன் மட்டும் எப்படி நடந்து கொள்கிறானாம்..ஏதோ தவறு செய்துவிட்டாள்,ஏசிவிட்டான்.இன்னும் ஏன் கோபம்? அது கூட சிறுபிள்ளைத் தனம்தானே?
    அவன் இன்னமும் தன்னைத் தப்பாகதானே எண்ணிக்கொண்டிருக்கிறான்.அவனை அவசியம் நேரில் சந்திக்க வேண்டும்.சந்தித்து உண்மையில் தன் மீது எந்தத் தவறும் இல்லையென்பதை அவனுக்கு உணர்த்த வேண்டும்.அவன் நிச்சயம் மன்னிப்புக் கேட்பான்.மசியக் கூடாது.அவனை நன்றாக திட்டிவிட்டு வந்துவிட வேண்டும்.ஏதேதோ எண்ணிக்கொண்டு அவனைத் தன்னுடைய தாமானுக்கு முன்பு உள்ள மினிமார்க்கெட்டிற்கு வரச் சொன்னாள்.அவனும் வந்தான்.மழைத்தூறல் போட்டுக்கொண்டிருந்தது.
  வருணன்(வருணபகவான்) அல்லவா?அதான் மழையையும் உடன் அழைத்து வந்திருக்கிறான், என்று எண்ணிக்கொண்டவள் அவனுக்குப் பேசுவதற்கு வாய்ப்பே கொடுக்காமல் படபடவென்று ஒரே மூச்சில் யாவற்றையும் சொல்லி முடித்தாள்.அவன் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தான்.அவள் எதிர்பார்த்தபடி மன்னிப்பெல்லாம் கேட்கவில்லை.
  சரி கிளம்பறேன் போக எத்தனித்தாள்.தூறலாக இருந்த மழை கடுமையாக இருந்தது.அவளுடைய வீட்டிற்கு இன்னும் கொஞ்சம் உள்ளே போகவேண்டும்.மினிமார்க்கெட்டில் ஒரு குடையை வாங்கி கொண்டு அவளைத் தன்னுடன் குடையில் அழைத்துப் போனான்.ஒரு கையில் குடையைப் பிடித்துக்கொண்டு இன்னொரு கையால் அவளுடைய தோளை தன் தோளோடு சேர்த்து அணைத்துக்கொண்டு நடந்தான்.கனமான மழையுடன் போட்டி போட இயலாமல் அந்தச் சின்னஞ்சிறு குடை  பின்வாங்க மழை இருவரையும் நனைத்தது,அருகிலிருந்த ஒரு காலி வீட்டின் முன் கொஞ்ச நேரம் நின்றார்கள்.
  தன்னை உரசிக்கொண்டு நின்றிருந்த அகல்யாவைப் பார்த்தான் வருண்.உண்மையில் அவள் மீதான கோபம் அவனுக்கு எப்போதோ தணிந்து போயிருந்தது.சொல்லப்போனால் ஒரு வாரமாக அறவே பார்க்காமல், ஒரு வார்த்தை கூட பேசாமல் அவள் மீதுள்ள அவன் ஏக்கம் அதிகரித்திருந்தது.மழை அவனுடைய ஏக்கத்தை அதிகப்படுத்த சட்டென்று அவளை இழுத்து தன் முகத்தை அவளை நோக்கிக் கொண்டுபோனான் வருண்.
  ஐயோ என்ன செய்யப் போகிறான்? தான் அதற்கெல்லாம் இன்னும் தயாராகவில்லையே?” பயத்தில் கண்களை இறுக மூடிக்கொண்டாள்.
   பொழைச்சிப் போ,” அவளை ஒன்றும் செய்யாமல் விடுவித்தவன் குடையை அவளிடம் கொடுத்து, அவளைப் போகச்சொல்லிவிட்டு மழையிலேயே நனைந்து கொண்டு போய் மோட்டார் சைக்கிளைக் கிளப்பினான்.

 தொடரும்…..

Thursday, April 7, 2011

தேன்மொழி எந்தன் தேன்மொழி - அத்தியாயம் 11

தேன்மொழி எந்தன் தேன்மொழி - அத்தியாயம் 11




 
உன்னைக் கேட்கவே வந்தேன்
ஓர் ஆசை வாசகம்..
நீயா என்னிடம் கேட்டாய்??
ஒரு காதல் யாசகம்….
  
       அலைபாயுதே கண்ணா என்று இசைத்த கைத்தொலைபேசியைக் கையில் எடுத்தாள் அகல்யா.வருணிடமிருந்து அழைப்பு வந்திருந்தது.
       எங்க இருக்க டியர்?”
       பஸ்ல இருக்கேன்
       அட என்னருமை காதலியே... பஸ் எங்கே இருக்கு?”
       பஸ் ரோட்ல் இருக்கு
        படுத்தாதே அகல்யா, என்னைப் பார்க்க வர்றியா இல்லையா?”
        நான் இப்ப வேற இடத்துக்குப் போய்க்கிட்டிருக்கேன்,
        எங்க?”
        அதை கேட்கக்கூடாது
        சரி வரப்ப எங்க இருந்து வருவே?”
        எங்க போறேனோ அங்க இருந்து வருவேன்,” பேருந்து இரைச்சலில் அவன் பேசியது சரியாக விளங்காததால் தொடர்பைத் துண்டித்தாள்.
         வருணுக்குப் புரிந்து போனது.அவள் கோபமாய் இருக்கிறாள் என்று.இப்படியே விட்டால் அவள் ஒரு வாரம் கூட அவனுடன் பேசாமல் இருப்பாள்.எனவே அவளைச் சமாதானப்படுத்த எண்ணி அவனே மீண்டும் அழைத்தான்.
         அன்னைக்கு மண்டபத்துல என்னை அறவே தெரியாத மாதிரி என்ன அழகா நடிச்சீங்க? கண்ணு கூசுதுன்னீங்க? தள்ளி உட்கார சொன்னீங்க?”
         நீதானே சொன்ன?எனக்கும் உனக்கும் பழக்கம் இருக்குன்னு கொஞ்ச நாளைக்கு யாருக்கும் தெரிய வேண்டாம்னு,”
         அதுக்குன்னு இந்த மாதிரிதான் ஓவரா நடிக்கறதா?” எனக்குத் தெரியும்,உங்க பரம ரசிகைங்க எல்லாம் வந்திருப்பாங்கள்ல,அதான்
         சரி மன்னிச்சிடு,இப்பவே பத்து தோப்புக்கரணம் போடறேன்
        அகல்யாவுக்குச் சிரிப்புதான் வந்தது.இந்த வருணுக்காக ஒரு காலத்தில் எப்படியெல்லாம் ஏங்கினாள்.அவன் கருப்பா சிவப்பா உயரமா குள்ளமா நல்லவனா கெட்டவனா எதுவுமே தெரியாமல் வானொலியில் அவனுடைய குரலை மட்டும் கேட்டே அவன் மீது பித்து பிடித்து  அலைந்தவளை அவளுடைய தோழிகள் என்னவெல்லாம் சொன்னார்கள்?பைத்தியக்காரத் தனமாய் நடந்து கொள்கிறாள் என்றார்கள்.வருண் அவளுக்குக் கிடைக்கப் போவதில்லை என்றhர்கள்.
        ஆனால் பலர் பல மாதிரி சொல்லியும் அவள் தன்னை மாற்றிக்கொள்ளவில்லை/எப்போதும் போல் அவன் மீது பைத்தியமாகதான் அலைந்தாள்.கல்லூரித் தோழிகளிடம் அவனைத் தன் மாமா என்று உரிமை கொண்டாடுவாள்.தூக்கத்தில் அவனை நினைத்து உளறியிருக்கிறாள்.அவனுடைய குரலை ஒலிநாடாவில் பதிவு செய்து கொள்வாள்.அவன் பெண் நேயர்களிடம் சிரித்துப் பேசிவிட்டால் முகத்தை உம்மென்று வைத்துக்கொள்வாள்.குறிப்பிட்ட நாட்களில் அவன் வராது போனால் அந்த ஏமாற்றத்தைக் கூட தாங்க முடியாமல் அழுதுவிடுவாள்.சில சமயங்களில் அவன் வேறு யாரையாவது நேசித்து விடுவானோ என்று சுயமாக கற்பனை செய்து கொண்டும் அழுதிருக்கிறாள்.பல நாட்கள் அவனை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஏக்கம் அவளுக்கு வந்ததுண்டு.ஏக்கங்களையெல்லாம் மனதிற்குள்ளேயே புதைத்துக் கொண்டு அவனைச் சந்திப்பதற்குச் சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து இரண்டாண்டுகள் காத்திருந்தாள்.இந்த இரண்டு ஆண்டுகளில் அவனுக்கு எத்தனையோ கடிதங்கள் எழுதி வைத்திருந்தாள்.அவை எல்லாவற்றையும் ஒரு நாள் துணிந்து தபாலில் அனுப்பி வைத்தாள்.ஏறக்குறைய 200 கடிதங்கள்.அக்கடிதங்களையெல்லாம் படித்து முடிக்க அவனுக்கு ஒரு மாத காலம் பிடித்தது.தன்னுடைய ரசிகைகளில் இவள் கொஞ்சம் வித்தியாசமானவளாக இருக்கிறாளே என்று வியந்தான்.அப்போதே அவன் மனதிலும் அவளை நேரில் சந்திக்க வேண்டுமென்ற ஆவல் எழுந்தது.
         அவனை முதன்முதலாக சந்தித்தபோது நடந்த அனைத்தும் அகல்யாவுக்கு நன்றாக நினைவிலிருந்தது.அவனிடம் புதிதாக வாங்கிய தன்னுடைய ஆட்டோகிராப் புத்தகத்தைக் கொடுத்து முதல் பக்கத்திலேயே ஏதாவது வாசகம் எழுதி கையொப்பமிட சொன்னாள்.
        ரோஜாக்களுக்கு மத்தியில் முட்கள் இருப்பதையெண்ணி வருத்தப்படாதே,முட்களுக்கு மத்தியிலும் ரோஜாக்கள் மலர்வதையெண்ணி சந்தோழூப்படு,”
                                - என்றென்றும் பிரியமுடன் வருணன் 
         என்று எழுதி கொடுத்தான், (அன்றிலிருந்து அது அவளுக்குப் பிடித்த வாசகமாகிப் போனது,) 
         அப்புறம் என்னை நேர்ல பார்க்கனும் என்ற உங்க ஆசை நிறைவேறிடுச்சா?” அவளுடைய சின்னஞ்சிறு கருவண்டு விழிகளை நேருக்கு நேர் பார்த்து கேட்டான் வருண்.நேரில் அவனுடைய குரல் இன்னும் இளமையாவும்,கவர்ச்சியாகவும் இருந்தது.
        அவளுடைய ஆசைகள் எல்லாம் ஒரு நாளில் தீர்ந்துவிட கூடியவையா என்ன?இன்னும் எவ்வளவோ இருக்கின்றன?அவனுடன் கைகோர்த்தபடி ஷாப்பிங் செல்ல வேண்டும். ஒரே வாக்மேனை இவள் ஒரு காதிலும் அவன் ஒரு காதிலும் பொருத்திக்கொண்டு மென்மையான பாடல்களைக் கேட்க வேண்டும் இப்படி எவ்வளவோ ஆசைகள் இருக்கின்றனதான்,அதையெல்லாம் சொன்னால் என்ன இது அபத்தமாக இருக்கிறது என்று முகம் சுளிக்க மாட்டானா?அதையெல்லாம் விட அபத்தமான ஒன்று இருக்கிறதே?அதுதான் அவனுடைய அந்த நீளமான மூக்கை ஒரு தடவை பிடித்து இழுத்துப் பார்க்க வேண்டுமென்பது…”
        மணியாச்சி கிளம்பலாமா?” அவன் வேண்டுமென்றே மிகவும் சீரியஸாக இருந்தான்.
       இவன் சிரிப்பதெல்லாம் வானொலியில் மட்டும்தானா?” என முணுமுணுத்தவள் கடிகாரத்தைக் கண்டுபிடித்தவனைத் திட்டிக்கொண்டே அவசர அவசரமாக எழ, அவளுடைய காலணிகளில் ஒன்று பட்டென்று அறுந்து போனது.பேருந்து நிலையம் தூரமாக இருந்ததாலும் அருகில் எந்த காலணி கடையும் இல்லை என்ற காரணத்தினாலும் மிக மிக மெதுவாக அவள் நடக்க அவனும் அவளுக்கு ஈடாக மெதுவாக நடந்து வந்தான்.
      பேருந்து நிலையம் இன்னும் தூரமாக இருந்திருக்க கூடாதா?” என அவள் ஏங்க….
      அவளுடைய இன்னொரு காலணியும் அறுந்து போயிருக்க கூடாதா என அவன் ஏங்கியதை கடைசி வரை அவள் அறியவேயில்லை.
      கோத்தாராவில் அவளுக்குப் புதிய காலணிகளை வாங்கி கொடுத்து பேருந்தில் ஏற்றிவிட்டுவிட்டு திரும்பி பார்க்காமல் நடந்து போனான்.சினிமாவில் வருவது போன்று கொஞ்ச தூரம் போன பிறகு கூட திரும்பி பார்க்கவில்லை அவன்.ஒரு கையசைத்தல் கூட இல்லை.அதன்பிறகு அவனிடமிருந்து எந்தவொரு அழைப்பும் வரவில்லை.அவன் தன் நம்பிக்கையை குலைக்கும் வகையில் எதையாவது பேசிவிடுவானோ என்ற பயத்தில் அவளும் அவனைத் தொடர்புக் கொள்ளவில்லை.
      ஆனால் அவள் மனம் பெரும் வருத்தத்தில் இருந்தது.வருணுக்குத் தன்னைப் பிடிக்கவில்லையோ என எண்ணினாள்.தான் அவனுக்குப் பரம ரசிகையாக இருப்பதை அவன் பொருட்படுத்தியதாகவே தெரியவில்லையே என வருந்தினாள்.

* * * * *
     என்னோட ரசிகையா இருக்கற உனக்கு என்னோட மனைவியா வர சம்மதமா?” ஒரு பெரிய அதிர்ச்சியை மின்அலைகளாக மாற்றி இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் அவளுடைய கைத்தொலைபேசிக்கு அனுப்பிவைத்தான் வருண்,
      அந்நேரத்தில் வானொலி கேட்டுக்கொண்டே பாடம் படித்துக் கொண்டிருந்த அகல்யா அதிர்ச்சியில் நாற்காலியிலிருந்து பொத்தென்று விழுந்தாள்.
      உன்னை ஒரு பூ கேட்கவே ஓடி வந்தேன் அங்கே..
      பூந்தோட்டமே சொந்தம் என்றால் நான் போவது எங்கே?
     அகல்யாவுக்கும் சித்ராவுடன் இணைந்து பாடவேண்டும் போலிருந்தது.

                                                   தொடரும் …..