Sunday, February 19, 2012

Neeyum Naanum 4

ஒரு தடவை என்னை ஏசி,நான் அழுதுவிட அன்று நீ என்னை வழக்கத்தைவிட விஷேஷமாய் கவனித்ததது என்னுள் ஏக்கமாய்ப் பதிந்துவிட,மீண்டும் அதில் கிறங்கி போக எண்ணிய நான் ஒரு பொழுதில் வேண்டுமென்றே நீ அதிக வேலையாய் இருக்கும் சமயம் உன்னிடம் வம்பு பண்ணுவேனாம்.நான் அனுப்பிய குறுந்தகவல் உனக்கு என்மீது கோபத்தை உண்டு பண்ணிவிட்டது என்று வேண்டுமென்றே விளையாட்டுக்கு குறுந்தகவல் மூலம் சொல்வேனாம்.நீ அதிக வேலையாக இருப்பதால் பதில் அனுப்ப மாட்டாயாம்..எனக்குத்  தெரிந்தும் வேண்டுமென்றே அந்த எஸ்.எம்.எஸ் அனுப்பிய என் கையைத் தண்டிக்கப் போகிறேன்,இனி அந்தக் கையால் கைபேசியைப் பிடித்து எந்தக் குறுந்தகவலும் அனுப்ப முடியாது,’ என குறுந்தகவல் அனுப்பி வைப்பேனாம்.நீ கோபத்தோடு வீட்டுக்கு வருவாயாம்..நான் வேண்டுமென்றே என் கைகளை மறைத்துக்கொண்டு பேசாமல் இருப்பேனாம்.நீ அதிகமாய் இரசித்து,நேசிக்கும் கதை எழுதும் என் வளையல் கையை ஏதோ பண்ணிவிட்டேன் என்று நீ ஆத்திரத்தோடு என்னை நெருங்குவாயாம்.ஓங்கி ஓர் அறை விடவேண்டும் என எண்ணிக்கொண்டே நான் பின்னால் மறைத்து வைத்திருந்த என் கையைப் பற்றி இழுத்து பார்ப்பாயாம்..வண்ண வண்ண வளையல்கள் அணிந்து,நன்கு சிவந்த மருதாணியோடு என் கை மிகவும் அழகாக இருக்குமாம்.நீங்க ரொம்ப நேசிக்கற,உங்களுக்குச் சொந்தமான இந்தக் கையைத் தண்டிக்க எனக்கு என்ன உரிமை இருக்கு??அதான் இப்படி அழகுப்படுத்தி வெச்சிருக்கேன்..அன்புத் தண்டனை,” என சொல்லிவிட்டு உன்னைப் பார்த்து முறைப்பேனாம்.உன் கோபம் பட்டென மறைந்து வழக்கமாய் என்னை மயக்கும் சிரிப்பு சிரித்துக்கோண்டே,”உன் விளையாட்டு ரசனைக்கு ஓர் அளவே இல்லையா? என கேட்டுக்கொண்டே என் வளை கையில் ஒரு முத்த வளையல் பதித்து என்னை உன் மார்போடு அணைத்துக்கொள்வாயாம்..

Saturday, February 18, 2012

நீயும் நானும் 5

நீயும் நானும் 5

பனி தூறும் ஓர் அதிகாலப் பொழுதில் நான் 3 மணிக்குத் துயில் களைவேனாம்.என் இடையை உரிமையோடு வளைத்திருக்கும் உன் கையை மெதுவாய் விலக்கிவிட்டு தூங்கும் உன்னை ஒரு கணம் இரசிப்பேனாம்.பிறகு விடுவிடுவென வீட்டைக்கூட்டி,துடைத்து, சமையல் செய்வேனாம்.சமையல் முடிந்ததும் குளித்துவிட்டு வந்து மணியாகிவிட்டதாக பொய்ச் சொல்லி உன்னை எழுப்புவேனாம்.தூக்கத்தில் சிணுங்கும் உன்னைத் தள்ளிக்கொண்டு போய் குளியலற...ையில் விட்டு,உன் தலையில் தண்ணீரை ஊற்றுவேனாம்.வேறு வழியின்றி நீ குளித்துவிட்டு வருவதற்குள் வீடு முழுக்க கமகமவென சாம்பராணி புகையைப் போட்டு வைப்பேனாம்.உன்னை அழைத்துக்கொண்டு போய் பசியாற வைப்பேனாம்.உண்மை அறியும் நீ செல்லமாய் என் தலையில் தட்டிவிட்டு எனக்கும் ஊட்டிவிடுவாயாம்.வாசமான சாம்பராணி புகையை நுகர்ந்துகொண்டே இருவரும் சுடசுட தேநீரைச் சுவைப்போமாம்.பிறகு இருவரும் அந்தப் பனி பொழுதில்,குயில் கூவும் ஓசையைக் கேட்டுக்கொண்டே,கைகள் கோர்த்தபடி நட்சத்திரங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டே வீட்டுக்கு வெளியே உலாவுவோமாம்.எனக்குத் தூக்கம் வந்ததும் நீ என்னை வீட்டுக்குள் அழைத்து வந்துவிடுவாயாம்.குளிர் தாங்க முடியாத நான் உன் மார்பில் முழுவதுமாய் என்னைப் புதைத்துக்கொண்டு படுத்திருப்பேனாம்,உனக்கு உறக்கம் கலைந்து போனாலும் எனக்காக ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்தபடி படுத்திருப்பாயாம்.உன் ‘கதகதப்பில்’ சுகமாய் உறங்கி போவோமாம் நானும் உன் அன்பின் சின்னமாய் என் வயிற்றில் வளரும் ஓவியா குட்டியும்.