Tuesday, June 14, 2011

தேன்மொழி எந்தன் தேன்மொழி - அத்தியாயம் 18

தேன்மொழி எந்தன் தேன்மொழி அத்தியாயம் 18

 
கன்னத்தில் முத்தத்தின் ஈரம்
அது காயவில்லையே….
கண்களில் ஏனிந்த கண்ணீர்
அது யாராலே…???

         தேன்மொழி வருணின் வருகைக்காக காத்திருந்தாள்.வருண் சொல்லப்போகும் பதிலுக்காக ஆர்வமாக காத்திருந்தாள்.மனதில் ஒரு கவலையுடனேயே அவனை நெருங்கினாள் வருண்.
         என்னா முடிவு எடுத்திருக்கீங்க வருண்?”
         வருண் தடுமாறினான்.தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள சிறிது அவகாசம் தேவைப்பட்டது அவனுக்கு.
         முதல்ல உன் முடிவைச் சொல்லு தேன்மொழி,
         எனக்கு இன்னும் ரெண்டு வருசத்துக்கு கல்யாணம் வேண்டாம்னு தோணுது வருண்,
         அவளுடைய பதில் அவன் மனதில் கொஞ்சம் நம்பிக்கை ஊற்றியது.அந்த இரண்டு வருட கால அவகாசத்தில் தேன்மொழிக்குத் தன் நிலையை நிதானமாக எடுத்துச் சொல்ல வாய்ப்பிருந்தாலும்  இருக்கக்கூடும் என்ற சிறிய நம்பிக்கைதான் அது.
          எதுக்காக ரெண்டு வருசம்னு கேட்க மாட்டீங்களா?”
          எதுக்கு?”சுரத்தேயில்லாமல் கேட்டான்.
          கயல்விழியோட மேல்படிப்புக்கு எல்லா வசதியையும் செஞ்சி கொடுக்கனும்,அப்புறம் புதுசா இன்னொரு வியாபாரமும் தொடங்கலாம்னு திட்டம் வெச்சிருக்கேன்,”
          சரி. உன் விருப்பப்படியே செய்யலாம்,”
          குழந்தையைப் போல் துள்ளி குதித்தாள் தேன்மொழி.
          ரொம்ப நன்றி வருண்,அப்பா என்கிட்ட கல்யாணப் பேச்சை எடுத்ததும் எப்படி பயந்து போயிட்டேன் தெரியுமா?அதுவும் உங்ககிட்ட சொல்லி எனக்கு மாப்பிள்ளை பாக்க தேட போறதா சொன்னதும் இன்னும் பயந்து போயிட்டேன்,
          என்ன? திரும்ப சொல்லு,” அவனுக்கு அவள் சொன்னது சரியாக விளங்கவில்லை.
          ராமசாமி அவளிடம் சொன்னதை அப்படியே சொன்னாள்.
          அப்பாவுக்கு நான் பழசையெல்லாம் மறந்து மத்த பொண்ணுங்க மாதிரி கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசை.நீங்க சொன்னாதான் நான் கேட்பேனாம்,அதனால உங்களையே எனக்கு நல்ல மாப்பிள்ளையா பாக்க சொல்ல போறதா சொன்னாரு,” அதிர்ச்சியும் பிரமிப்பும் ஒரு சேர நின்றான் வருண்.
         என் மனசுல என்னென்ன ஆசை இருக்கு என்று தெரிஞ்சிக்காம நீங்க என்னைக் கல்யாணத்துக்குத் தயாராக சொல்ல மாட்டீங்க என்ற நம்பிக்கை இருந்தாலும் லேசா பயமும் இருந்துச்சி,நல்லவேளை என் மனசை புரிஞ்சிக்கிட்டீங்க,ஆனா சத்தியமா பிரியனுக்காக மட்டும் நான் கல்யாணம் வேண்டாம்னு சொல்லல.எனக்கு செய்ய வேண்டிய கடமைகள் கொஞ்சம் இருக்கு.அதுக்கு என் கல்யாணம் தடையா அமைஞ்சிட கூடாது,
        தேனும்மா நீ சொல்றதெல்லாம் நெஜமா?” உச்சக்கட்ட சந்தோஷத்தில் இருந்தான் வருண்.
        அப்படியானால்....அப்படியானால்……?”
        எனக்கு எது நல்லது கெட்டது எல்லாமே என்னைவிட உங்களுக்குதான் நல்லா தெரியும்,அதனால நீங்களே எனக்கு மாப்பிள்ளை பாருங்க,”
        ரொம்ப நன்றி தேனும்மா,” என்று முதன்முதலாய் அவளுடைய கையில் தன் கையை வைத்து அழுத்தி சொன்னான்.
        தான் மனம் மாறி திருமணத்திற்குச் சம்மதம் சொன்னதுதான் அவனுடைய சந்தோஷத்திற்குக் காரணம் என்று தேன்மொழி நினைத்துக்கொண்டாள்.
        இப்படியெல்லாம் கூட இருக்குமா என்ன?” அன்று தேன்மொழியின் அப்பா சொன்னதை மீண்டும் ஒரு முறை நினைத்துப் பார்த்தான்.
        தேன்மொழி உன்மேல ரொம்ப பாசம் வெச்சிருக்கா வருணா,அவளோட வாழ்க்கை நல்லபடியா அமையறது உன் கையிலதான் இருக்கு, இப்படிதானே அவர் அன்று அவனிடம் சொன்னார்.இவன்தான் அதை தப்பாக நினைத்துவிட்டான்.
        ஐயோ தேன்மொழி உன்னைப் பற்றி முழுவதும் அறிந்து வைத்திருக்கிறேன் என்றாயே? உன் மனதிலிருப்பதைத் தப்பாக எண்ணிவிட்டேனே?”
        தேன்மொழியின் மனதில் இவன் மீது எந்த ஆசையும் இல்லை,களங்கப்படாத மனதுடன் மிக மிக தெளிவாகவே இருக்கிறாள் அவள்.
        நல்லவேளை,அவசரப்பட்டு அவளிடம் எதையும் சொல்லித் தொலைக்கவில்லை.தேன்மொழியைப் பற்றி இவன் நினைத்தது அவளுக்கு கடைசிவரை தெரியாமல் போய்விட்டது.தெரிந்திருந்தால் அவள் மனம் என்ன பாடுபட்டிருக்கும்?என்னைப் பற்றி நீங்கள் அறிந்தது இவ்வளவுதானா என்று அவள் ஒரு வார்த்தை கேட்டிருந்தால் இவன் எப்படி தாங்கியிருப்பான்?
       அகல்யா இந்த விசயத்தைக் கேள்விப்பட்டால் எவ்வளவு சந்தோஷப்படுவாள்?
        :உன் வருண் உனக்குதான் அகல்யா,
        வருணுக்கு அகல்யாவை நேரில் பார்த்து எல்லாவற்றையுமம் சொல்லவேண்டும் போல் இருந்தது.கொஞ்ச காலத்திற்கு அவளுடைய கோபம் தீரும் வரை அவளைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றுதான் வருண் இரண்டு நாட்களாக அவளைப் பார்க்காமல் இருந்தான்.தொலைபேசியிலும் அவளைத் தொடர்புக் கொள்ளவில்லை.
        இப்போது உடனே அவனைச் சந்தித்து எல்லாவற்றையும் சொல்லவேண்டும் போலிருந்தது.அவளைத் தேடிப்போனான்.மினிமார்க்கெட்டில் நின்றுகொண்டு அவளுக்குப் போன் செய்தான்.அவளுக்குப் பதில் ரேணுதான் வந்தாள்.அகல்யா தலைவலியால் படுத்திருப்பதாகச் சொன்னாள்.
       வருணுக்கு அகல்யாவைப் பார்க்க வேண்டும் போலிருந்தாலும் பெண்பிள்ளைகள் தங்கியிருக்கும் வீடு என்பதால் தயங்கினான்.அவனது தயக்கத்தை ரேணு புரிந்து கொண்டாள்.
       பரவால வருண் சார், என்னை உங்க தங்கச்சி மாதிரி நெனைச்சுக்குங்க,வீட்டுக்குப் போயி அகல்யாவைப் பாருங்க.எனக்கு இப்ப க்ளாஸ் இருக்கு,நான் போறேன்,” ரேணு கிளம்பியதும் அகல்யா தங்கியிருந்த வீட்டுக்குப் போனான் வருண்.
       முகமெல்லாம் வெளுத்துப் போய் இருந்தாள் அகல்யா.தன்னால் ஏற்பட்ட மன உளைச்சல்தான் அவளுடைய இந்த நிலைக்குக் காரணம் என அவனுக்குப் புரிந்தது.அவளது நெற்றியில் கைவைத்தான்.அவள் அவனுடைய கையைத் தட்டிலிட்டாள்.
      இந்த பொய்யான அக்கறையெல்லாம் வேண்டாம் வருண்,நான்தான் உங்க மேல உயிரையே வெச்சிருந்தேன்.ஆனா நீங்க அப்படி இல்ல. எனக்கு வேனும்னா உங்ககிட்ட சொல்றதுக்கு ஆயிரம் விசயங்கள் இருக்கலாம்.ஆனா உங்களுக்கு என்கிட்ட சொல்றதுக்கு ஒரு விசயம் கூட இல்ல.உங்க மனசுல எத்தனையோ விசயங்களுக்கு அப்பால்தான் நான் இருக்கேன்,”
  நீங்களும் என்னைக் காதலிக்க ஆரம்பிச்சப்ப நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன்,ஆனா இப்ப என்னவோ நான் என் வாழ்நாள்ல உங்களை சந்திக்காமலேயே இருந்திருக்கலாமோன்னு தோனுது,” உடம்புக்கு முடியாத பட்சத்திலும் கோபமாகவே பேசினாள் அவள்.
       நான் பழைய மாதிரியே இருந்துக்கறேன்,இனிமே உங்க அழைப்ப எதிர்பார்க்க மாட்டேன்.உங்க வருகையை எதிர்பார்க்க மாட்டேன்.பழைய மாதிரி உங்க போட்டோவை என் பக்கத்துல வெச்சிக்கிட்டு, உங்க குரலைக் கேட்டுக்கிட்டே தூங்கிடுவேன்.எவ்வளவு தைரியமான பொண்ணு தெரியுமா நானு? உங்க விசயத்துல மட்டும் கோழையாகிடறேன்,” அவள் கண்களில் கண்ணீர் கட்டுக்கடங்காமல் பெருக்கெடுத்து ஓடியது.முதல் தடவையாக அவள் அழுவதைப் பார்க்கிறான் வருண்.
       சற்று முன்னர் கோபமாக பேசியவளா இவள்?”
       மண்டு, எல்லாவற்றையும் சொந்தமாக கற்பனை பண்ணிக்கொண்டு அழுகிறாள்.”
      அழுதுக்கொண்டிருந்த அவளை மெல்ல நிமிர்த்தி அவளைத் தன்னோடு அணைத்துக் கொண்டான்.கட்டுப்பாடுகள் தளர அவளை நிமிர்த்தி வெப்பமாயிருந்த கன்னங்களிலும் நெற்றியிலும் மாறி மாறி முத்தமிட்டான்.
     நான் உங்க மேல உயிரையே வெச்சிருக்கேன் வருண்,உங்களை என்னால யாருக்கும் விட்டுக்கொடுக்க முடியாது,” அவளது கண்ணீர்த்துளி அவனுடைய சட்டையை நனைத்தது.அவளை இழுத்துத் தன்னோடு அணைத்துக்கொண்டான் வருண்.தன்னுடைய உடல் வெப்பத்தை அவனும் உணரும் அளவுக்கு அவனோடு இறுக்கமாய் ஒட்டிக்கொண்டாள் அகல்யா.







தொடரும் …………….. 
    
             

No comments:

Post a Comment