Saturday, February 23, 2013

உதயகீதங்கள் : ஒரு முன்னோட்டம்

உடலின் அனைத்து மெல்லிய துளைகளையும் ஒருசேர திறக்கவல்லது இசை என பாடியுள்ளான் ஒரு கவிஞன்.அதை மறுப்போர் யாரும் உண்டோ?தமிழ்த்திரை இசையுலகில் அன்று தொட்டு இன்றுவரையில் பல பாடல்கள் வெளிவந்தபோதிலும் எழுபதாம்,எண்பதாம்,தொன்னுறாம் ஆண்டுகளில் வெளிவந்த பாடல்கள் என்றும் கேட்க கேட்க சலிக்காதவை.வயதானவர்கள் முதல் இளையோர் வரை அந்தக் காலக்கட்டத்தில் வந்த பாடல்கள் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றன.நானும் அதற்கு விதிவிலக்கல்ல.பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி மணிக்கணக்கில் வானொலியின் அருகில் அமர்ந்து பாடல்களைக் கேட்டு இரசிப்பேன்.கேட்க கேட்க இனம்புரியாத மகிழ்ச்சியும்,பரவசமும்,ஏதேதோ ஏக்கங்களும் என்னுள் தோன்றி என்னைப் பாடாய்ப்படுத்தும்.ஃபேஸ்புக் நட்புத்தளத்தில் சுதாகர்,மோகன்,சரஸ்யாழினி,சுதந்திரன்,மோகனஜோதி,ராஜ்மகன் ஆகிய நண்பர்களும் அந்த வகை பாடல்களுக்கு அடிமையானவர்கள்தாம்.பெரும்பாலான பொழுதுகளில் நான்,சுதாகர்,மோகன்,சுதந்திரன் மின்னல் பண்பலையில் மாலை ஐந்து தொடக்கம் எட்டுவரையில் ஒலியேறும் பாடல்களைக் கேட்டு கருத்துகளைப் பரிமாறிக்கொள்வோம்.அந்தப் பொழுது எங்கள் அனைவருக்குமே வாழ்வில் மிக இன்பமயமானதாக தோன்றும்.அத்தகையதொரு இனிய வேளையில்தான் நான் ரசித்த பாடல்களைப் பற்றி கட்டுரையாக பகிர்ந்து பலரின் வசந்தகால நினைவுகளை மீட்டெடுக்கலாமே என்ற எண்ணம் தோன்றியது.இந்த உதயகீதங்கள் அங்கத்தில் மிகச் சிறந்த பாடல்கள் என என் தேர்வில் இருக்கும் பாடல்கள் பற்றிய சிறு தகவல்களோடு,அப்பாடல்கள் எனக்குத் தந்த அனுபவங்களையும், பாடல்வரிகளையும் இணைக்க எண்ணியுள்ளேன்.நான் பிறக்காத காலம் தொட்டு,என் குழந்தைப்பருவம்,பள்ளிப்பருவத்தில் இரசித்த பாடல்களையும் மீண்டும் நினைவுகூர்வதன் வழி,என் வாழ்வின் வசந்த நாள்களை மட்டுமல்லாது உங்கள் அனைவரின் இளமைக்கால நினைவுகளையும் மீட்டுணர செய்யமுடியும் என்ற பெரும் நம்பிக்கையோடு என் தொடரை ஆரம்பிக்கிறேன்..மறவாமல் என்னோடு இணைந்திருங்கள்...இந்தத் தொடரை எத்தனை வாரங்களுக்கு எழுதுவேனோ தெரியாது.ஆனால் நான் எழுதும் முதல் பாகம் தொடங்கி கடைசி பாகம் வரை எனது அன்பிற்கினிய ஒரு ஜீவனுக்குச் சமர்ப்பிக்க நினைக்கிறேன்..என் அன்பின் அர்ப்பணம்...    <3  உதயகுமாரி கிருஷ்ணன்....

No comments:

Post a Comment