Tuesday, July 19, 2011

தொடர்கதை:உன்னால்தானே நானே வாழ்கிறேன் - அத்தியாயம் 2

உன்னால்தானே நானே வாழ்கிறேன் - அத்தியாயம் 2

      அன்று முதலாம் பருவ மாணவர்களுக்கான பதிவு நடந்து கொண்டிருந்ததால் விரிவுரைஞர்கள் யாரும் வகுப்பிற்கு வரவில்லை.
      க்ளாஸ்,இந்த முறை அதிகமான ஆண்கள் இருக்காங்க,கே,டி,பி,எம் ல 66 பேரு,கே.பி.எல்.ஐ ல 4 பேரு,” பதிவு நடக்கும் இடத்திற்குத் திருட்டுத்தனமாக போய் வந்த சோனியாதான் சொன்னாள்.கே.பி.எல். ஐ பயிற்சிக்கு வந்திருக்கும் ஆண்கள்  நான்கு பேர் மட்டும்தான் என்ற உண்மை எத்தனை பேருடைய மனதை உடைத்திருக்குமோ என்று பூங்குழலி நினைத்து சிரித்துக் கொண்டாள்.பின்னே இம்முறையாவது தங்களை விட வயதில் மூத்த ஆண்கள் வருவார்கள்.துணை தேடிக் கொள்ளலாம் என்று நினைத்தவர்கள் ஏமாந்து போயிருப்பார்களே?
    வா பூங்குழலி, ஜுனியர்ஸை பாக்க போலாம்,” அவளுடைய தோழிகளின் அழைப்புக்கு இணங்கி அவளும் மண்டபத்திற்கு இறங்கினாள்.பார்க்கும் இடத்திலெல்லாம் இந்தியர்கள்தான் அதிகம் இருந்தார்கள்.அவளும் அவளுடைய தோழிகளும் மாணவிகளுக்குத் தங்கும் விடுதியைக் கண்டுபிடிக்க உதவினார்கள்.நீலாவின் அறைக்கும் ஒரு மாணவி வந்திருந்தாள்.பெயர் சாரதா என்றாள்.
    எங்க பிள்ளை ரொம்ப சாது,வீட்டை விட்டு எங்கயும் தூரமா போனதில்ல,பத்திரமா பாத்துக்குங்கம்மா அவளுடைய அம்மா பூங்குழலியிடமும் அவளுடைய தோழிகளிடமும் சொல்லிவிட்டுப் போனாள்.கடந்த வருடம் நீலாவின் அம்மாவும் இதையேதான் சொன்னாள்.
    சாரதா கல்லூரியில் புதிதாக கொடுக்கப்பட்ட வெள்ளை நிற டீ - சர்ட்.,மெரூண் வண்ண ட்ராக் அணிந்து கழுத்தில் ஸ்காப் கட்டிக்கொண்டு காலணியை மாட்டிக்கொண்டு கிளம்பினாள்.அறிமுக வாரமென்றhல் இப்படிதான்.ஒரு வாரத்திற்கு காலை ஆறு மணியிலிருந்து நள்ளிரவு ஒரு மணி வரையில் நிறைய நடவடிக்கைகள் இருக்கும்.அவளும் அதை அனுபவித்தவளாயிற்றே,அதிலும் அவளுடைய தமிழ்த்துறை சீனியர்கள் மிக மிக கண்டிப்பானவர்கள்.வந்த முதல் நாளன்றே நன்னெறி வகுப்பின்போதே ஏகப்பட்ட திட்டு விழுந்தது அவர்களுக்கு.முன்னோடிகளைப் பார்த்தால் வணக்கம் சொல்வதில்லை என்ற குற்றச்சாட்டு.அதிகாலை ஆறு மணிக்கெல்லாம் கல்லூரியைச் சுற்றி ஓடவேண்டும்.ஒரு வினாடி தாமதமாக வந்தால் கூட தண்டனைதான்.இரவில் எல்லாம் முடிந்து களைப்பாக மெத்தையில் சாயும்போது தேவைதானா இந்த ஆசிரியர் தொழில் என்று நொந்து போயிருக்கிறாள்.ஆனால் இந்த இறுதி வருடத்தில் அதையெல்லாம் நினைத்துப் பார்க்கும்போது மிகவும் சுகமாகவே இருந்தது.
     ஆசிரியர் தொழிலை அவளுக்கு அதிகமாக பிடித்துப் போக காரணம் புகழேந்திதான்.அவள் இதுவரை எந்த ஆடவனிடமும் மனதைப் பறிகொடுக்காமல் இருப்பதற்குக் காரணம் அவன்தான்.அவனைப் பற்றி நினைக்கும்போதே சுகமாக இருந்தது.அவனைப் பார்த்து இரண்டு வாரமாகியிருந்தது.இவ்வாரம் வியாழக்கிழமை வகுப்பு முடிந்ததுமே கிளம்பிவிட வேண்டுமென நினைத்துக் கொண்டாள்.
                 
                              * * * * *
     கை நிறைய புத்தகங்களைச் சுமந்து கொண்டு போன பூரணி புகழேந்தி எதிரில் வரும் நேரம் பார்த்தா அவற்றையெல்லாம் கீழே போட வேண்டும்?சிரித்துக் கொண்டே அவற்றையெல்லாம் எடுத்து அவளிடம் கொடுத்தவன் என்ன நினைத்தானோ வாங்க டீச்சர், நான் எடுத்துட்டு வர்றேன்,” என்று புத்தகங்களை எடுத்துக்கொண்டு அவளுடைய வகுப்பறை வரை வந்தான். 
    பூரணி நொந்து கொண்டே போனாள்.அவள் இந்தப் பள்ளிக்கு வந்து மூன்று வாரம்தான் ஆகியிருந்தது.இப்போதுதான் ஆசிரியர் பயிற்சியை முடித்துக்கொண்டு வந்தவள்.எனவே கொஞ்சம் தடுமாறினாள்.ஆனால் எப்போதுமே ஏன் புகழின் எதிரிலேயே தடுமாற வேண்டும்?
    பள்ளிக்கு வந்த முதல்நாளே புகழேந்தி என்ற பெயர்தான் அவள் காதுகளில் முதலில் விழுந்தது.கொஞ்சம் வயதான ஆசிரியராக இருக்கக்கூடும் என்றுதான் எண்ணினாள்.ஆனால் இருபத்தாறு வயது இளைஞனாக இருப்பானென்று அவள் எதிர்பார்க்கவே இல்லை.தலைமையாசிரியரைச் சந்தித்துப் பேசிவிட்டு தனக்குக் கொடுக்கப்பட்ட வகுப்பைப் பார்க்க போய்க்கொண்டிருந்தாள்.ஐந்தாம் ஆண்டை கடக்க முற்பட்டபோது ஒரு மாணவனின் அழுகைச் சத்தம் கேட்க வகுப்பினுள் எட்டிப் பார்த்தாள்.
    அழுதுக்கொண்டிருந்த அந்த மாணவனுடைய தாயார் அவனிடம் ஏதோ சொல்ல அவர் எதிரிலேயே அந்தப் பையனைத் திட்டோ திட்டு என திட்டிவிட்டு அவனுடைய அம்மாவிடம் மன்னிச்சிடுங்க என்ற ஒரே ஒரு வார்த்தையை மட்டும் சொல்லிவிட்டுப் போய்விட்டான்.அப்போதே அவளுக்கு அவனை அதிகம் பிடித்துப்போனது.இரண்டாவது தடவை அவள் அவனைப் பார்த்தபோது பாலர் பள்ளிச் சிறுமி ஒருத்தியிடம் என்னவோ விசாரித்துக் கொண்டிருந்தான்.அந்தச் சிறுமி பயந்து போய் அழ ஆரம்பித்துவிட்டாள்.புகழ் உடனே அந்தச் சிறுமியைத் தன்னோடு அணைத்து. முதுகைத் தட்டிக்கொடுத்தபடி சமாதானப்படுத்த அக்காட்சியைக் கண்ட பூரணிக்கு அவனை இன்னும் அதிகமாக பிடித்துப்போனது.கண்டிப்பும் அன்பும் ஒரு சேர கலந்திருக்கும் ஆண்களை எந்தப் பெண்ணுக்குதான் பிடிக்காது?அவளுக்கு அவனை அளவுக்கதிகமாகவே பிடித்தது.சீனியர் ஆசிரியை மூலம் அவனுடைய வயது முதல் அவன் சபாவிலுள்ள பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு தற்போது ராஜh மெலேவார் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சியை மேற்கொண்டிருப்பது வரை எல்லாவற்றையும் தெரிந்து வைத்துக்கொண்டாள்.
   அவனுடன் பேசுவதற்கான சந்தர்ப்பத்தை அவளே அடிக்கடி ஏற்படுத்திக் கொண்டாள்.ரெக்கார்ட் புத்தகம், மாணவர்களின் வருகைப் பதிவேட்டை எழுதும் முறை எல்லாவற்றையும் கல்லூரியில் கற்றுக் கொடுத்திருந்தாலும் வேண்டுமென்றே தெரியாத மாதிரி அவனிடம் கேட்டுத்தான் தெரிந்து கொண்டாள்.ஏழு ஆசிரியர்கள் மட்டுமே போதிக்கும் சிறிய பள்ளி என்பதால் அவனுடன் பேசும் வாய்ப்பு அவளுக்கு அதிகம் கிடைத்தது.அதிலும் அவளுடைய வகுப்பிற்கு பக்கத்திலேயே அவனுடைய வகுப்பும் இருந்தது இன்னும் வசதியாகப் போய்விட்டது.
  அவளுக்கு அவனை அளவுக்கதிகமாகப் பிடித்தது.அவன் செய்யும் ஒவ்வொரு செயலும் அவளுக்குப் பிடித்துப் போனது.அவன் வருகை பதிவேட்டில் ஒழுங்காக கையெழுத்து போடமாட்டான்.சில சமயங்களில் காரணமின்றி கோபமாக இருப்பான்.ஒரு தடவை அவனுடைய மாணவி ஒருத்தி கழத்துப் பட்டையைக் கட்டிக்கொள்ள தெரியாமல் அவனிடம் வர,பிறகு கட்டி விடுவதாக சொல்லி அனுப்பிட்டு அந்த மாணவியின் கழுத்துப் பட்டையை எடுத்து தன் தோளில் போட்டுக்கொண்டான்.அது அவளுக்குப் பிடித்திருந்தது.அவனுடைய மாணவர்களை அவன் அடிக்கமாட்டான்.ஆனால் தலையில் கொட்டுவான்.அதுவும் அவளுக்குப் பிடித்தது.அவனுக்கே தெரியாமல் அவனை அதிகம் இரசிக்க ஆரம்பித்திருந்தாள் அவள்.அவனைப் பார்த்தும் பாராததுபோல் போய்விட்டு அவன் தூரம் போனதும் அவனையே பார்த்துக்கொண்டிருப்பாள்.ஒரு நாள் அவனைப் பள்ளியில் பார்க்க முடியாமல் போனால் கூட ஏங்கி போவாள்.வார இறுதி ஏன்தான் வருகிறதோ என்று நொந்து போவாள்.அவள் பள்ளியில் எந்த மூலையில் இருந்தாலும் புகழ் அங்கேதான் எங்கோ ஒரு மூலையில் இருக்கிறான் என்பதில் அவளுக்குச் சந்தோஷம்.
    அவன் சம்பந்தப்பட்ட எல்லாமே அவளுக்குப் பிடித்துப் போனது.பச்சையா, சாம்பலா என தீர்மானிக்க முடியாத அவனுடைய வீரா காரை அவளுக்குப் பிடித்தது.அவனை நினைத்து தினமும் அவனுடைய காரை தீண்டிவிட்டுப் போக பிடித்தது.அவன் மீது கோபம் வந்தால் அவனுடைய காரை அடித்துவிட்டுப் போய்விடுவாள்.பின்னர் அவன் அவளுடன் நன்றாக பேசி பழக ஆரம்பித்த போது ஒரு தடவை அவன் அவளை பெயர் சொல்லி அழைத்தது பிடித்தது.தினமும் வீட்டில் அவனைப் பற்றியேதான் பேசிக்கொண்டிருந்தாள்.அவளுடைய அப்பாவிற்கே சந்தேகம் வந்துவிட்டது.பூரணி காதலிக்க ஆரம்பித்துவிட்டாளா என்று.தலைமையாசிரியர் அவருக்கு நல்ல பழக்கமென்பதால் அவரிடம் புகழைப் பற்றி விசாரித்து மனதுக்குத் திருப்தியாய் இருந்தால் அவனையே தனது மாப்பிள்ளையாக்கிக் கொள்ள வேண்டுமென்று நினைத்துக்கொண்டார்.

* * * * *

         ஓய்வு நேரத்தில் ஆசிரியர் அறையில் உட்கார்ந்து மாணவர்களின் பயிற்சிப் புத்தகத்தைத் திருத்திக்கொண்டிருந்தாள் பூரணி.புகழ் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.ஒரு மாணவன் வந்து சிற்றுண்டிச் சாலையில் ஏதோ தகறாறு என்றான்.
  கொஞ்ச நேரம்யா, சாப்பிட்டு வந்துடறேன்,பொறுப்பாசிரியர் அங்கதான் இருப்பாங்க.அவங்ககிட்ட சொல்லு,” என்று அவனை அனுப்பி வைத்தான்.அந்த மாணவன் மீண்டும் வந்தான்.புகழ்தான் வரவேண்டும் என்றான்.
  எங்கிருந்து வந்தாயடா? எனை பாடு படுத்த,” புகழ் பாடிக்கொண்டே பாத்திரத்தை மூடிவிட்டு எழ. பூரணி சிரித்துக்கொண்டே வேலையைச் செய்தாள்.ஐந்து நிமிடம் கடந்திருக்கும்,யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள்.தேவதையைப் போன்று நி;ன்றிருந்த பூங்குழலி அவனிடம் புகழைப் பற்றி விசாரித்தாள்.அவள் பதில் சொல்வதற்குள் புகழ் வந்துவிட்டான்.பூங்குழலியைப் பார்த்ததும்...
   ஹாய் சாயாங்,” என்றபடி அவளுடைய தோள்மீது கையைப் போட்டு எங்கோ அழைத்துப் போனான்.கலங்கிய கண்களோடு புத்தகங்களை எடுத்துக்கொண்டு தன்னுடைய வகுப்பை நோக்கிப் போனாள் பூரணி.
                                                  



தொடரும் ……

2 comments: